முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 85. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 85. மருதம் - தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவரதன்பு புலப்படுகின்றது. மற்று அவர் செயலால் அறிந்திலம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
யாரினும் இனியன் பேரன் பினனே உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் |
5 |
யாண ரூரன் பாணன் வாயே. | |
- வடம வண்ணக்கன் தாமோதரனார். |
முடிபு: ஊரன், பாணன் வாயே இனியன்; பேரன்பினன்.
கருத்து: பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 85. மருதம் - தோழி கூற்று, பாணன், இலக்கியங்கள், தோழி, கூற்று, குறுந்தொகை, மருதம், தலைவன், உடைய, உடையான், வாயே, கொண்ட, எட்டுத்தொகை, இனியன், சங்க