முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 84. பாலை - செவிலி கூற்று
குறுந்தொகை - 84. பாலை - செவிலி கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே. |
5 |
- மோசிகீரனார். |
முடிபு: தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள்; அது துனியாகுதலை இனி அறிந்தேன்.
கருத்து: தலைவி எம்பால் வெறுப்புற்று ஒரு தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே அறிந்திலன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 84. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், செவிலி, யான், பாலை, குறுந்தொகை, கூற்று, மணத்தையும், மலரினது, அறிந்தேன், ஆம்பல், தலைவி, எட்டுத்தொகை, சங்க, இப்பொழுது, வியர்த்தனென், என்றனள்