முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 83. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 83. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவுக்குரிய முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்மில் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழந் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வரும்என் றாளே. |
5 |
- வெண்பூதனார். |
முடிபு: நாடனை வருமென்றோளாகிய அன்னை, பெரும் பெயருலகம் பெறீஇயர்.
கருத்து: தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 83. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அன்னை, நாடனை, தமது, சங்க, எட்டுத்தொகை, செவிலி