முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 77. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 77. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் ஏதத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)
அம்ம வாழி தோழி யாவதும் தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் அரிய கானஞ் சென்றோர்க்கு |
5 |
எளிய வாகிய தடமென் தோளே. | |
- மதுரை மருதன் இளநாகனார். |
முடிபு: தோழி, கானம் சென்றோர்க்கு எளியவாகிய தோள்கள் தவறு இல.
கருத்து: தலைவர் சென்ற பாலையினது ஏதத்தைக் கருதி என் தோள்கள் மெலிந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 77. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தோழி, தோள்கள், குறுந்தொகை, இட்ட, தவறு, சென்றோர்க்கு, சங்க, தலைவர்திறத்து, எட்டுத்தொகை