முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 70. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 70. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே இனையள் என்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. |
5 |
- ஓரம்போகியார். |
முடிபு: குறுமகள் நறுந்தண்ணீரள்; அணங்கினள்; புனையளவு அறியேன்; கிளவி சில மெல்லிய; அணையுங்கால் அணை மெல்லியள்.
கருத்து: இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 70. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, உடைய, அவளை, மென்மையை, கிளவி, இவள், எட்டுத்தொகை, சங்க, ஐம்புலனுக்கும், குறுமகள்