முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 65. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 65. முல்லை - தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ வென்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன் இன்புறு துணையொடு மறுவந் துகளத் தான்வந் தன்றே தளிதரு தண்கார் வாரா துறையுநர் வரனசைஇ வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. |
5 |
- கோவூர்கிழார். |
முடிபு: உறையுநர் வரல் நசைஇ இருந்திரோ எனக் கார் வந்தன்று.
கருத்து: கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 65. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், முல்லை, கார்ப்பருவம், குறுந்தொகை, வந்திலர், இருந்திரோ, வந்தபின்பும், எட்டுத்தொகை, வென்று, சங்க