முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 63. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. |
|
- உகாய்க்குடிகிழார் |
முடிபு: நெஞ்சே, செய்வினை எண்ணுதி; அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின்.
கருத்து: இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், பாலை, நெஞ்சே, எம்மை, பொருள், குறுந்தொகை, கூற்று, உய்த்தியோ, உரைத்திசின், வருமோ, அரிவையும், எட்டுத்தொகை, செய்வினை, எண்ணுதி, சங்க