முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 60. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 60. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனது பிரிவையாற்றாத தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாம லிருப்பினும் அவரைக் காணுமாத்திரத்தில் எனக்கு இன்பம் பிறக்கும்; அஃதும் இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் |
5 |
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே. | |
- பரணர். |
முடிபு: காதலர் நல்கார் நயவாராயினும் பல்காற் காண்டலும் இனிது.
கருத்து: தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 60. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, பல்காற், நல்கார், பலமுறை, காதலர், காண்டலும், தலைவர், எட்டுத்தொகை, சங்க, கண்ட, முடவன், நக்கி