முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 50. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 50. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவனால் விடப்பட்ட தூதுவரை நோக்கி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று தலைவி கூறியது.)
ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. |
5 |
- குன்றியனார். |
முடிபு: ஞாழல் தாஅய் அவர் ஊரில் துறையை அணிந்தன்று; அவர் மணந்ததோள் புலம்பணிந்தன்று.
கருத்து: அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 50. மருதம் - தலைவி கூற்று, அவர், இலக்கியங்கள், தலைவி, ஞாழல், குறுந்தொகை, கூற்று, மருதம், துறையை, தோள், மரத்தின், அழகு, எட்டுத்தொகை, சங்க, பெற்றது, மணந்த