முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 44. பாலை - செவிலித்தாய் கூற்று
குறுந்தொகை - 44. பாலை - செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்திற்றேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)
காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. |
|
- வெள்ளிவீதியார். |
முடிபு: கால் பரிதப்பின; கண் வாள் இழந்தன; பிறர் பலர்.
கருத்து: தலைவியையும் தலைவனையும் நான் கண்டேனில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 44. பாலை - செவிலித்தாய் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, செவிலித்தாய், கூற்று, இழந்தன, பிறர், நடந்து, சங்க, எட்டுத்தொகை, நோக்கி