முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 397. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 397. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரியப்புக்க தலைவனைநோக்கி, “தலைவி நின் தண்ணளியால் வாழும் நிலையினள்; ஆதலின் விரைவில் மீண்டு வருவாயாக” என்பதுபடத் தோழி சொல்லியது.)
நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட் டன்னா வென்னுங் குழவி போல |
5 |
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் தோழி தன்னுறு விழுமங் களைஞரோ இலளே. |
|
- அம்மூவனார். |
முடிபு: சேர்ப்ப, இன்னாசெயினும் இனிது தலையளிப்பினும் என் தோழி நின்வரைப்பினள்; விழுமம் களைஞர் இலள்.
கருத்து: நீ தலைவியினது துன்பங்கருதி விரைவில் வருவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 395 | 396 | 397 | 398 | 399 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 397. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, கூற்று, சேர்ப்ப, விரைவில், எட்டுத்தொகை, சங்க