முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 385. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 385. குறிஞ்சி - தலைவி கூற்று
(நொதுமலர் வரைவொடு புகுந்தமையறிந்த தலைவி, ‘‘தலைவன்தன் அன்பிற் சிறிதும் குறையாதிருப்ப அதனை யறியாது இவ்வூரிற்புதியோர் சிலர் வந்தனர்” என்று கூறுவாளாய்த் தோழியை அறத்தொடுநின்று அவ்வரைவை மாற்றச் சொல்லியது.)
பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
5 |
அன்றை யன்ன நட்பினன் புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. |
|
- கபிலர். |
முடிபு: கிழவன் என்றும் அன்றையன்ன நட்பினன்; இவ்வூர்புதுவோர்த்து.
கருத்து: நொதுமலர் வரையப்புகுந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 383 | 384 | 385 | 386 | 387 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 385. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நட்பினன், என்றும், பெரிய, சங்க, எட்டுத்தொகை, நொதுமலர்