முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 37. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 37. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர் சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழியவர் சென்ற வாறே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
முடிபு: நசை பெரிதுடையர்; நல்குவர்; அவர் சென்ற ஆறு அன்பின.
கருத்து: தலைவர் விரைவில் மீண்டு வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 37. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, சென்ற, பாலை, அவர், குறுந்தொகை, அன்பின, தலைவர், நல்குவர், விரைவில், எட்டுத்தொகை, சங்க