முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 366. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 366. குறிஞ்சி - தோழி கூற்று
(காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு, “இஃதுஎக்காரணத்தால் உண்டாகியது?” என்று வினவிய செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.)
பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற் சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ வெறியாள் கூறவும் அமையாள் அதன்தலைப் பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை |
5 |
பழுத கண்ண ளாகிப் பழூதன் றம்மவிவ் வாயிழை துணிவே. |
|
- பேரிசாத்தனார். |
முடிபு: இவ்வாயிழை அமையாள், நீலம் நோக்கி அழுதகண்ணளாகித் துணிவு பழுதன்று.
கருத்து: தலைவிக்கு நீலப்பூவைத் தந்து நட்புச்செய்த அன்பன் ஒருவன் உளன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 364 | 365 | 366 | 367 | 368 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 366. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நோக்கி, நீலம், எட்டுத்தொகை, சங்க, அமையாள்