முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 360. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று
(தாய் வெறியெடுக்கவெண்ணியதைக் கூறி அஞ்சிய தோழிக்கு, “தலைவன் இங்கே வாராதொழியின் நன்றாம்; அதனால் துன்பம் உண்டாயினும் பின் இனிதாக முடியும்” என்று தலைவி கூறியது.)
வெறியென உணர்ந்த வேல னோய்மருந் தறியா னாகுதல் அன்னை காணிய அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் |
5 |
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே. |
|
- மதுரை ஈழத்துப் பூதன்றேவனார். |
முடிபு: தோழி, நாடன் இரவினான் வாரற்க.
கருத்து: தலைவன் ஈண்டு வாராதொழிக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 358 | 359 | 360 | 361 | 362 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, எனது, நாடன், தலைவன், வாராதொழிக, சோலை, தாய், எட்டுத்தொகை, சங்க, இங்கே, வாரற்க