முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 355. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 355. குறிஞ்சி - தோழி கூற்று
(மழை பெய்யும் நடுயாமத்தில் தலைவன் வந்தானாக, “இந்த இருளில் நீ எங்ஙனம் வழி தெரிந்து எம் ஊரைத்தேடி வந்தனை?” என்று அவனுக்குத் தோழி கூறியது.)
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப |
5 |
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே. |
|
- கபிலர். |
முடிபு: வெற்ப, விசும்பு காணலை; நிலங்காணலை; இருள் பட்டன்று; யாமத்து யாங்கு வந்தனை? எம் சிறு குடி யாங்கு அறிந்தனை? யான் நோகு.
கருத்து: நீ இவ்விரவில் வருதல் குறித்து அஞ்சுகின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 353 | 354 | 355 | 356 | 357 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 355. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, எங்ஙனம், குறுந்தொகை, கூற்று, வெற்ப, இருள், யான், தனையோ, யாங்கு, ணலையே, சங்க, வந்தனை, எட்டுத்தொகை, பட்டன்று