முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 351. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று
(தலைமகன்தமர் தலைவியை மணம்பேசுதற் பொருட்டு வந்தாராக,"அவருக்கு நமர் உடம்படுவார்கொல்லோ?" என்று ஐயுற்ற தலைவியைநோக்கி, "நமர் உடம்பட்டனர்" என்று தோழி கூறியது.)
வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் |
5 |
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி இன்னகை ஆயத் தாரோடு இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. |
|
- அம்மூவனார். |
முடிபு: வளையோய், நமர் துறைவர்க்கு உரிமை செப்பினர்;உவந்திசின்; இவ்வூர் இன்னும் அற்றோ?
கருத்து: தலைவரது வரைவுக்கு நம் தமர் உடம்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 349 | 350 | 351 | 352 | 353 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 351. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், நமர், குறுந்தொகை, கூற்று, உரிமை, செப்பினர், புன்னை, துறைவர்க்கு, இன்னும், வளையோய், சங்க, உடம்பட்டனர், எட்டுத்தொகை, உவந்திசின்