முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 338. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 338. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “தலைவன்வந்தான்” என்று துணிவுபற்றிக் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச் செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் |
5 |
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள் விளங்குநக ரடங்கிய கற்பின் நலங்கே ழரிவை புலம்பசா விடவே. |
|
- பெருங்குன்றூர்கிழார். |
முடிபு: அரிவை, புலம்பு அசாவிடப் பெருவிறல் தேர் வந்தன்று.
கருத்து: தலைவன் மீண்டு விரைவில் வருவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 336 | 337 | 338 | 339 | 340 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 338. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, தேர், பெருவிறல், பனியையுமுடைய, சங்க, எட்டுத்தொகை, வந்தன்று