முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 332. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 332. பாலை - தோழி கூற்று
(தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, “தலைவனுக்கு நின்துயர் நிலையைக்கூறினால் என்?” என்று தோழி கூறியது.)
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து கூறின் எவனோ தோழி நாறுயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றச் சிறுகுடி யிழிதரு |
5 |
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே. | |
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார். |
முடிபு: தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?
கருத்து: நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 330 | 331 | 332 | 333 | 334 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 332. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, யானை, தலைவனுக்கு, துன்பம், எவனோ, வந்த, எட்டுத்தொகை, சங்க, கூறின்