முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 331. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 331. பாலை - தோழி கூற்று
(தலைவன் பொருள்வயிற் பிரிய எண்ணியதையறிந்து வருந்தியதலைவியை நோக்கி, "அவர் கொடுமையையுடைய பாலை நிலத்தைக்கடந்து செல்வரோ? செல்லார்" என்று தோழி கூறியது.)
நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும் கடுங்கண் யானைக் கான நீந்தி இரப்பர்கொல் வாழி தோழி நறுவடிப் |
5 |
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன நன்மா மேனி பசப்ப நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே. |
|
- வாடாப் பிரபந்தனார். |
முடிபு: தோழி, பொருள்தரற்கு, மேனி பசப்ப, கானம் நீந்தி இறப்பர்கொல்?
கருத்து: தலைவர் பொருள்வயிற் பிரிதல் உறுதியன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 329 | 330 | 331 | 332 | 333 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 331. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, மேனி, நீந்தி, பசப்ப, சங்க, எட்டுத்தொகை, பொருள்வயிற்