முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 328. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 328. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, "அலரை அஞ்சற்க; அவ்வலர் நன்மையையேவிளைக்கும்" என்று தோழி கூறியது.)
சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி அலவன் சிறுமனை சிதையப் புணரி குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன் நல்கிய நாள்தவச் சிலவே அலரே வில்கெழு தானை விச்சியர் பெருமகன் |
5 |
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
- பரணர். |
முடிபு: துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே; அலர் ஆர்ப்பினும்பெரிது.
கருத்து: அலர் மிகுதியாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 326 | 327 | 328 | 329 | 330 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 328. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, நெய்தல், தலைவன், குறுந்தொகை, நல்கிய, செய்த, துறைவன், அலர், ஞாழல், எட்டுத்தொகை, காலத்தில், சங்க