முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 315. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 315. குறிஞ்சி - தலைவி கூற்று
("தலைவன் வரைவிடை வைத்துப் பிரியுங்காலத்தில் ஆற்றும்ஆற்றல் உடையையோ?" என்று வினவிய தோழிக்கு, "அவனதுவிருப்பப்படியே ஒழுகும் தன்மையினேனாதலின் ஆற்றுவேன்" என்றுதலைவி கூறியது.)
எழுதரு மதியங் கடற்கண் டாஅங் கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன் ஞாயி றனையன் தோழி நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. |
|
- மதுரை வேள்ஆதத்தனார். |
முடிபு: தோழி, மலைநாடன் ஞாயிறனையன்; என் தோள் நெருஞ்சியனைய.
கருத்து: தலைவன் கருதுவதையே யானும் கருதி ஆற்றியிருப்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 313 | 314 | 315 | 316 | 317 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 315. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தோழி, தலைவி, நெருஞ்சி, எட்டுத்தொகை, சங்க