முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 313. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 313. நெய்தல் - தலைவி கூற்று
(இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பத்தோழி,இயற்பழித்த விடத்துத் தலைவி "அவரது நட்பு என்றும் அழியாதது"என்று கூறியது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. |
5 |
- ...... |
முடிபு: துறைவனோடு யாத்தேம்; நட்புயாத்தன்று; அது அவிழ்த்தற்கரிதாகி, முடிந்தமைந்தன்று.
கருத்து: தலைமகனது நட்பு அழியாதது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 311 | 312 | 313 | 314 | 315 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 313. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், நட்பு, குறுந்தொகை, கூற்று, அழியாதது, யாத்தேம், எட்டுத்தொகை, சங்க