முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 311. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 311. நெய்தல் - தலைவி கூற்று
(“இரவில் தலைவன் ஈண்டு வந்து செல்வதை ஆயத்தார் யாவரும்அறிந்தனர்; அதனால் அலர் பெருகியது” என்று தலைவி, தலைவன்சிறைப்புறத்தில் இருப்பத் தோழிக்குச் சொல்லியது.)
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற் புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர் யான்கண் டனனோ இலனோ பானாள் ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் |
5 |
தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே. |
|
- சேந்தன் கீரனார். |
முடிபு: தோழி, தேர் யான் கண்டனனோ இலனோ, ஆயமெல்லாம்கண்டன்று; அலர் யாங்கு ஒழிவ?
கருத்து: தலைவன் வந்து செல்வதை யாவரும் அறிந்து பழிமொழிகூறுகின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 309 | 310 | 311 | 312 | 313 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 311. நெய்தல் - தலைவி கூற்று , தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, குறுந்தொகை, நெய்தல், இலனோ, யான், அலர், தலைவன், எட்டுத்தொகை, சங்க, வந்து, செல்வதை