முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 308. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 308. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைவிடை வேறுபட்ட தலைவியை நோக்கி, “நின் பொருட்டன்றேதலைவன் பிரிந்தான்” என்று தோழி கூறியது.)
சோலை வாழைச் சுரிநுகும் பினைய அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து மயங்குதுயர் உற்ற மையல் வேழம் உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் |
5 |
மாமலை நாடன் கேண்மை காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. |
|
- பெருந்தோட் குறுஞ்சாத்தனார். |
முடிபு: நாடன் கேண்மை காமந்தருவதோர் கை தாழ்ந்தன்று.
கருத்து: தலைவன் நினக்கு நன்மை உண்டாதற் பொருட்டன்றேபிரிந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 306 | 307 | 308 | 309 | 310 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 308. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கேண்மை, நாடன், எட்டுத்தொகை, சங்க