முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 294. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 294. நெய்தல் - தோழி கூற்று
(பகற்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாக நிற்ப, தோழி தலைவிக்குக்கூறுவாளாகி, “பலரோடு நாம் விளையாடும்போது தலைவன் வந்துஅளவளாவிச் சென்றால் அலருண்டாகும்; அதனால் நாம் இன்பத்தையேபெறுவோம். எப்பொழுதும் அருகில் தலைவன் இருத்தலின் தாய்அறிந்தாள்; இனி இல்லிற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாள்; இதற்குத்தலைவனே காரணம் ஆயினன்” என்று கூறியது.)
கடலுட னாடியும் கான லல்கியும் தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே தித்தி பரந்த பைத்தக லல்குல் |
5 |
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான் தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. |
|
- அஞ்சிலாந்தையார். |
முடிபு: ஆடியும் அல்கியும் அயர்ந்தும் முயங்கினன் செலின்,அலர்ந்தன்று மன்; உழையிற் போகான், தான் ஓம்பலைத் தந்தனன்.
கருத்து: தலைவனை யறிந்த தாய் நின்னை இற்செறிக்கக் கருதினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 292 | 293 | 294 | 295 | 296 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 294. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தோழி, கூற்று, நெய்தல், குறுந்தொகை, ஆடியும், போகான், உழையிற், தாய், செய்த, நாம், எட்டுத்தொகை, சங்க, வந்து, முயங்கினன்