முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 290. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 290. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்” என்று தலைவி கூறியது.)
காமந் தாங்குமதி யென்போர் தாம தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல |
5 |
மெல்ல மெல்ல இல்லா குதுமே. | |
- கல்பொரு சிறுநுரையார். |
முடிபு: காமம் தாங்குமதி என்போர், அஃது அறியலர் கொல்?மதுகையர் கொல்? யாம் காணேமாயின் இல்லாகுதும்.
கருத்து: தலைவரது பிரிவு நீட்டிப்பின் என் உயிர் நீங்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 288 | 289 | 290 | 291 | 292 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 290. நெய்தல் - தலைவி கூற்று, மெல்ல, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, நெய்தல், யாம், மிக்க, கொல், தாங்குமதி, எட்டுத்தொகை, சங்க, கல்பொரு