முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 29. குறிஞ்சி - தலைன் கூற்று
குறுந்தொகை - 29. குறிஞ்சி - தலைன் கூற்று
(தலைவன் இரவுக் குறியை விரும்ப, அதனைத் தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பித்தாள்; பின்னும் அவனது நெஞ்சம் இரவுக் குறியை விரும்ப, “நின் குறையை அறிந்து நிறைவேற்றுவார் அரியராகவும், நீ வருந்துதலினாற் பயன் யாது?” என்று அவன் அதனை நோக்கி இரங்கிக் கூறியது).
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும் பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு |
5 |
மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. |
|
- அவ்வையார். |
முடிபு: நெஞ்சே, நின் பூசல் கேட்குநர்ப் பெறின் பெரிது.
கருத்து: இனித் தலைவியை இரவில் காண்டல் அரிது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 29. குறிஞ்சி - தலைன் கூற்று, இலக்கியங்கள், நெஞ்சே, நின், குறுந்தொகை, தலைன், கூற்று, குறிஞ்சி, உரைகள், உடைய, கேட்குநர்ப், பெற்று, குறியை, எட்டுத்தொகை, சங்க, இரவுக், விரும்ப, பூசல்