முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 289. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 289. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவி வேறுபட்டாள்எனக் கவலையுற்ற தோழிக்கு, “நான் அவரை நினைந்து இரங்கினேன்அல்லேன்; என் பொருட்டுக் கவலை உடையார் போல் இவ்வூரினர்அவரைக் கொடியர் என்பதை அறிந்தே வருந்தினேன்” என்று தலைவி கூறியது.)
வளர்பிறை போல வழிவழிப் பெருகி இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் உழையர் அன்மையின் உழப்ப தன்றியும் மழையுந் தோழி மான்றுபட் டன்றே |
5 |
பட்ட மாரி படாஅக் கண்ணும் அவர்திறத் திரங்கு நம்மினும் நந்திறத் திரங்குமிவ் வழங்கல் ஊரே. |
|
- பெருங் கண்ணனார். |
முடிபு: தோழி, அனையேமாகிச் சாஅய் உழப்பதன்றியும் மழையும்மான்றுபட்டன்று; படாஅக் கண்ணும் ஊர் இரங்கும்.
கருத்து: பிறர் தலைவரைக் கொடியர் என்பது நினைந்து வேறுபட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 287 | 288 | 289 | 290 | 291 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 289. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், தோழி, கூற்று, குறுந்தொகை, முல்லை, படாஅக், கண்ணும், உள்ளார், நினைந்து, எட்டுத்தொகை, சங்க, கொடியர், சாஅய்