முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 286. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில் ஆர நாறும் அறல்போற் கூந்தல் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. |
5 |
- எயிற்றியனார். |
முடிபு: கொடிச்சியின் மூரன் முறுவலொடு நோக்கினை உள்ளிக்காண்பென் போல்வல்.
கருத்து: யான் அளவளாவிய தலைவியை இனிக் காண்டல் அரிது போலும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 284 | 285 | 286 | 287 | 288 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 286. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உடைய, புகையும், எட்டுத்தொகை, சங்க, முறுவலொடு