முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 276. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 276. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தோழியால் சேட்படுத்தப்பட்ட விடத்துத் தலைவன், "இனிமடல் ஏறிச் சான்றோரறிய வழக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன்" என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது.)
பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்பில் காப்போர் அறிதலும் அறியார் முறையுடை யரசன் செங்கோல் அவையத் |
5 |
தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ னேயிவ் வழுங்கல் ஊரே. |
|
- கோழிக் கொற்றனார். |
முடிபு: தைஇயும் சூழ்ந்தும் எழுதிய தொய்யிலை, காப்போர் அறியார்; அரசன் அவையத்தில் யான் கடவின் யாங்காவது? இவ்வூர் பேதை; அளிது.
கருத்து: மடலேறி அறங்கூற வையத்துச் சான்றோரது துணை கொண்டு தலைவியை மணந்து கொள்வேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 274 | 275 | 276 | 277 | 278 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 276. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், உடைய, எழுதிய, குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பேதை, அறங்கூற, யான், கடவின், தொய்யிலை, தைஇயும், எட்டுத்தொகை, சங்க, தலைவியை, காப்போர், அறியார்