முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 265. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 265. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைபொருட்குத் தலைவன் பிரிந்தானாக, அவன் வரையாது பிரிந்தான் என வருந்திய தலைவிக்குத் தலைவன் பிரிந்த காரணங் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும் தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடனறி மாக்கள் போல இடன்விட் டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன் |
5 |
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை யான்றனக் குரைத்தனெ னாகத் தானா ணினனி தாகா வாறே. |
|
- கருவூர்க்கதப் பிள்ளை. |
முடிபு: தோழி, நின்னிலை யான் உரைத்தனெனாக, வெற்பன் இஃது ஆகாவாறு நாணினன்; நன்னர் நெஞ்சத்தன்.
கருத்து: நின்னை வரைந்து கொள்ளுதல் காரணமாகவே தலைவன்பிரிந்தானாதலின் நீ வருந்தற்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 263 | 264 | 265 | 266 | 267 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 265. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, உடைய, கூற்று, தலைவன், குறுந்தொகை, அறிந்த, நின்னிலை, வரைந்து, நின்னை, கொள்ளுதல், நெஞ்சத்தன், திறக்கும், சங்க, எட்டுத்தொகை, அவன், கண்ட, வெற்பன், நன்னர்