முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 258. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 258. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவனை நோக்கி, "தலைவி அழகிழந்தாள்!ஆதலின் நினக்கு ஆகும் பயன் ஒன்றில்லை; ஈண்டு வாரற்க" என்று தோழி வாயில் மறுத்தது.)
வாரலெஞ் சேரி தாரனின் றாரே அலரா கின்றாற் பெரும காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை |
5 |
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன் அழிசி ஆர்க்கா டன்ன விவள் பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. |
|
- பரணர். |
முடிபு: பெரும, இவள் நலம் தொலைதல் கண்டு வாரல்; தாரல்.
கருத்து: நீ ஈண்டு வாரற்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 256 | 257 | 258 | 259 | 260 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 258. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், உடைய, குறுந்தொகை, பெரும, கூற்று, தொலைதல், சங்க, எட்டுத்தொகை, ஈண்டு, வாரற்க