முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 254. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 254. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, வருந்திய தலைவியை நோக்கி, "நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்த பின்னரும் அவர் வருவார் எனச் சொல்லும் தூதுகள் வந்தில; அவர் என்னை மறந்தனர்" என்று தலைவி கூறியது.)
இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலையலர் வந்தன வாரா தோழி துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர் பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார் |
5 |
செய்பொருள் தரனசைஇச் சென்றோர் எய்தின ராலென வரூஉந் தூதே. |
|
- பார்காப்பானார். |
முடிபு: தோழி, அலர் வந்தன; தூது வாரா; அவர் மறந்தனர்; உள்ளார்.
கருத்து: தலைவர் என்னை மறந்தனர் போலும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 252 | 253 | 254 | 255 | 256 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 254. பாலை - தலைவி கூற்று, மறந்தனர், அவர், இலக்கியங்கள், தலைவி, பாலை, சென்ற, தோழி, குறுந்தொகை, கூற்று, வந்தன, வாரா, தலைவர், பருவம், எட்டுத்தொகை, சங்க, தூதுகள், வந்தில, என்னை