முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 253. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 253. பாலை - தோழி கூற்று
(பிரிவிடை வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின் நிலையைஉணர்ந்திலர்; உணரின் தம்வினை முற்றுதலையும் ஓராது உடனே மீள்வர்" என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
கேளா ராகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற் பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின் நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற் |
5 |
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை ஆறுசென் மாக்கள் சேக்கும் கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. |
|
- பூங்கண்ணனார். |
முடிபு: தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.
கருத்து: அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 251 | 252 | 253 | 254 | 255 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 253. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, நின், குறுந்தொகை, கூற்று, மீள்வர், கேட்பின், உடனே, சங்க, எட்டுத்தொகை, தலைவர்