முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 245. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 245. நெய்தல் - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, "தலைவனது கொடுமையைப் பிறர் அறியின் அது மிக இன்னாது; ஆதலின் யான் ஆற்றியிருப்பேன்"என்று தலைவி கூறியது.)
கடலங் கான லாய மாய்ந்தவென் நலமிழந் ததனினு நனியின் னாதே வாள்போல் வாய கொழுமடல் தாழை மாலைவேல் நாட்டு வேலி யாகும் மெல்லம் புலம்பன் கொடுமை |
5 |
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே. | |
- மாலைமாறனார். |
முடிபு: புலம்பன் கொடுமை வெளிப்படின் நலம் இழந்ததனினும் இன்னாது.
கருத்து: என் துயரப் பிறர் அறியாதவாறு ஆற்றுவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 243 | 244 | 245 | 246 | 247 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 245. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, நெய்தல், கொடுமை, குறுந்தொகை, உடைய, புலம்பன், இன்னாது, தலைவன், எட்டுத்தொகை, சங்க, பிறர்