முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 24. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 24. முல்லை - தலைவி கூற்று
(பிரிந்த தலைவன் மீண்டுவருவேன் என்று சொல்லிய இளவேனிற் பருவத்தைக் கண்ட தலைவி, “தலைவர் பிரிவினால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளைக் கண்டு ஊரார் பழி கூறுகின்றனர். அது தீர அவர் இன்னும் வந்திலர்” என வருந்திக் கூறியது).
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர் என்னை யின்றியுங் கழிவது கொல்லோ ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத் தெழுகுளிர் மிதித்த ஒருபழம் போலக் குழையக் கொடியோர் நாவே |
5 |
காதலர் அகலக் கல்லென் றவ்வே. | |
- பரணர். |
முடிபு: ஒண்பூ யாணர் கழிவது கொல்லோ? காதலர் அகலுதலால் குழையக் கொடியோர்களின் யா கல்லென்றன.
கருத்து: தலைவர் வாராமையின் ஊரினர் பழி கூறுதல் அடங்கவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 24. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, காதலர், முல்லை, குறுந்தொகை, கூற்று, குழையக், கொல்லோ, உடைய, கழிவது, தலைவன், எட்டுத்தொகை, சங்க, ஒண்பூ, யாணர், என்னை