முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 239. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 239. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறமாக இருக்கையில் தலைவி தோழிக்குக் கூறுவாளாய், ‘‘என் தோள்கள் நெகிழ்ந்தன; நாணமும் அகன்றது’’ என்று கூறி வரைவு கடாயது.)
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச் சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள் நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி பாம்புமிழ் மணியின் தோன்றும் |
5 |
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. | |
- ஆசிரியர் பெருங்கண்ணனார். |
முடிபு: தோழி, மலைகிழவோற்குத் தொடி ஞெகிழ்ந்தன; தோள் சாயின; விடு நாண் உண்டோ?
கருத்து: என் நிலை அறிந்து தலைவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 237 | 238 | 239 | 240 | 241 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 239. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, உடைய, குறிஞ்சி, தலைவன், குறுந்தொகை, தும்பி, எட்டுத்தொகை, உண்டோ, தோள்கள், சங்க