முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 220. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 220. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
பழமழைக் கலித்த புதுப்புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் |
5 |
வண்டுசூழ் மாலையும் வாரார் கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. |
|
- ஒக்கூர் மாசாத்தியார். |
முடிபு: தோழி, பிரிந்தோர் மாலையும் வாரார்; கண்டிசின்.
கருத்து: தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வரவும் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 218 | 219 | 220 | 221 | 222 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 220. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, முல்லை, குறுந்தொகை, கூற்று, தோழி, வாரார், மலர்ந்த, மாலையும், உடைய, கூறிச், எட்டுத்தொகை, சங்க, சென்ற, வரவும், வந்திலர்