முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 216. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 216. பாலை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவிஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)
அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே அன்னள் அளியள் என்னாது மாமழை |
5 |
இன்னும் பெய்ய முழங்கி மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே. |
|
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார். |
முடிபு: தோழி, அவர் காடிறந்தோர்; யான்படர் கூர்ந்திசின்; மழைஎன் உயிர் குறித்து மின்னும்.
கருத்து: கார்காலம் வந்தது கண்டு யான் துன்புறு வேனாயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 214 | 215 | 216 | 217 | 218 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 216. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, தலைவி, கூற்று, பொருட்டு, யான், தோழி, சங்க, எட்டுத்தொகை, உயிர்