முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 211. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 211. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல் எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை வேனி லோரிணர் தேனோ டூதி |
5 |
ஆராது பெயருந் தும்பி நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே. |
|
- காவன்முல்லைப் பூதனார். |
முடிபு: தோழி, சுரன் இறந்தோராகிய நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம்.
கருத்து: தலைவர் மீளார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 209 | 210 | 211 | 212 | 213 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 211. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, நம்மைப், அருள், எஞ்சினம், சங்க, எட்டுத்தொகை, பிரிந்த, தலைவர்