முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 21. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 21. முல்லை - தலைவி கூற்று
(தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.)
வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை கானங் காரெனக் கூறினும் யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. |
5 |
- ஓதலாந்தையார். |
முடிபு: கானம் காரெனக் கூறினும் அவர் பொய் வழங்கலராதலின் யான் தேறேன்.
கருத்து: இது கார்ப்பருவம் அன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 21. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, உடைய, குறுந்தொகை, அவர், காரெனக், கூறினும், கொன்றை, கார்ப், எட்டுத்தொகை, சங்க, கட்டிய