முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 205. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 205. நெய்தல் - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாளெனவருந்திய தோழியை நோக்கி, “தலைவர் பிரிந்தவுடன் என் நுதலிற்பசலை தானே பரந்தது” என்று தலைவி கூறியது.)
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக் கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் |
5 |
யாங்கறிந் தன்றுகொல் தோழியென் தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. |
|
- உலோச்சனார். |
முடிபு: தோழி, சேர்ப்பன் ஏறி நனைப்பச் சென்றனன்; பசப்புயாங்கறிந்தன்று கொல்? நுதலில் ஊர்தரும்.
கருத்து: தலைவன் பிரிவினால் யான் பசலை நோயுற்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 203 | 204 | 205 | 206 | 207 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 205. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தோழி, ஊர்தரும், தலைவன், சங்க, எட்டுத்தொகை, சேர்ப்பன்