முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 197. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 197. நெய்தல் - தலைவி கூற்று
(பருவ வரவின்கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” எனத்துணிபு கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)
யாதுசெய் வாங்கொல் தோழி நோதக நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவிற் கூற்றம் காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே. |
5 |
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
முடிபு: தோழி, கூதிர் உருவிற் கூற்றம் எற்குறித்து வரும்; யாதுசெய்வாம்?
கருத்து: தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 195 | 196 | 197 | 198 | 199 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 197. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், கூற்றம், தோழி, குறுந்தொகை, கூற்று, கொண்ட, கூதிர்க், யாதுசெய்வாம், ஏற்றுக், எற்குறித்து, கூதிர், உருவிற், சங்க, எட்டுத்தொகை