முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 184. நெய்தல் - தலைவன் கூற்று
குறுந்தொகை - 184. நெய்தல் - தலைவன் கூற்று
(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே இதற்கிது மாண்ட தென்னா ததற்பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம் மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை |
5 |
நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படுஉம் கான லானே. |
|
- ஆரிய வரசன் யாழ்ப்பிரமதத்தன். |
முடிபு: கானலான் நெஞ்சம் ஒழிந்தன்று; அறிகரி பொய்த்தல்ஆன்றோர்க் கில்லை; குறுகல் ஓம்புமின்.
கருத்து: நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 182 | 183 | 184 | 185 | 186 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 184. நெய்தல் - தலைவன் கூற்று, இலக்கியங்கள், நெஞ்சம், தலைவன், நெய்தல், கூற்று, குறுந்தொகை, மாட்சிமைப்பட்ட, ஆண்டுச், பாவை, அறிகரி, சங்க, எட்டுத்தொகை, கில்லை