முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 181. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 181. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)
இதுமற் றெவனோ தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியி னகலாது பாஅற் பைம்பயிர் ஆரு மூரன் |
5 |
திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. |
|
- கிளிமங்கலங் கிழார். |
முடிபு: தோழி, ஊரன் மனைக்கடம் பூண்ட நமக்கு இன்னாக்கிளவி எவன்?
கருத்து: தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 181. மருதம் - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, மருதம், கூற்று, பெரிய, நமக்கு, பூண்ட, குறை, எட்டுத்தொகை, தலைவனைக், சங்க