முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 178. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 178. மருதம் - தோழி கூற்று
(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில்தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற நும் விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)
அயிரை பரந்த அந்தண் பழனத் தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் |
5 |
கரிய மாகிய காலைப் பெரிய தோன்றினிர் நோகோ யானே. |
|
- நெடும்பல்லியத்தையார். |
முடிபு: இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கல் ஆனீர்; யாம்நுமக்கு அரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர்; யான் நோகு.
கருத்து: நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்புயான் நன்கறிந்திலேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 176 | 177 | 178 | 179 | 180 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 178. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், மருதம், பெரிய, குறுந்தொகை, கூற்று, தோழி, காலைப், யான், மாகிய, காலத்தில், எட்டுத்தொகை, சங்க, நீர், இடைமுலைக்