முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 176. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 176. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)
ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ |
5 |
வேறுபுல னன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே. |
|
- வருமுலையாரித்தியார். |
முடிபு: போகியோன், எந்தை, யாண்டுளன் கொல்? என் நெஞ்சு கலிழும்.
கருத்து: நின்னை ஒரு தலைவன் விரும்பி அலமருகின்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 174 | 175 | 176 | 177 | 178 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 176. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், வந்து, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, கூற்று, நாட்கள், வந்தானல்லன், தலைவன், நெஞ்சு, யாண்டுளன், எங்கே, எட்டுத்தொகை, சங்க, இருக்கின்றானோ, ஒருநாள், வாரலன்