முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 170. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 170. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)
பலவும் கூறுகவ தறியா தோரே அருவி தந்த நாட்குர லெருவை கயனா டியானை கவள மாந்தும் மலைகெழு நாடன் கேண்மை தலைபோ காமைநற் கறிந்தனென் யானே. |
5 |
- கருவூர்கிழார். |
முடிபு: யான், நாடன்கேண்மை தலைபோகாமை அறிந்தனென்; அஃது அறியாதோர் பலருங் கூறுக.
கருத்து:தலைவன் என்னை வரைந்து கொள்வானென்னும் துணிவுடையேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 170. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், யான், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, தமக்குத், அறிந்தனென், கூறுக, தலைவன், எட்டுத்தொகை, சங்க, காலத்தில்