முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 17. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 17. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன் குறையை நிறைவேற்ற உடன்படாத தோழியை நோக்கித் தலைவன், ‘‘காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள்’’என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறியது.)
மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே. |
|
- பேரெயின் முறுவலார். |
முடிபு: காமம் காழ்கொளின் மடலும் ஊர்ப; கண்ணியுஞ் சூடுப; ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப.
கருத்து: நான் மடலூர எண்ணியுள்ளேன.்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 17. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சூடுப, படுப, கருத்து, ஊர்ப, வரைபாய்தல், எட்டுத்தொகை, சங்க, மடலும்